லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தில் நடப்பில் உள்ள கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளை அகற்றவுள்ளதாக டெலிகிராஃப் நாளிதழ் தெரிவித்துள்ளது.
'பிளான் பி' என்றழைக்கப்படும் கடுமையற்ற கட்டுப்பாடுகளைக் கொண்ட திட்டம் தற்போது இங்கிலாந்தில் நடப்பில் உள்ளது. முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வழிமுறைகள், தடுப்பூசி போட்டுக்கொண்டதை நிரூபிக்கும் சான்றிதழ்கள் ஆகியவை இதில் அடங்கும்.
இத்தகைய கட்டுப்பாடுகள் இவ்வாரம் அகற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

