பெய்ஜிங்: பெய்ஜிங்கில் கண்டறியப்பட்டுள்ள உள்ளூர் ஓமிக்ரான் கிருமித்தொற்று சம்பவத்திற்கு கனடாவில் இருந்து வந்த பொட்டலமே காரணம் என்று சீன சுகாதார அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வெளிநாடு எங்கும் செல்லாத அந்நபர், அலுவலகத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பொட்டலங்களைக் கையாண்டதாக அதிகாரிகள் கூறினர்.
கடந்த ஜனவரி 11ஆம் தேதி கனடாவில் இருந்து ஹாங்காங், அமெரிக்கா வழியாக பெய்ஜிங் சென்றடைந்த பொட்டலத்தின் மேற்பகுதியிலும் அதனுள் இருந்த சில ஆவணங்களிலும் கிருமித்தொற்று இருந்ததாக பரிசோதனையில் உறுதியானது.
இதையடுத்து, வெளிநாட்டில் இருந்து வருபவற்றைப் பிரிக்கும்போது கையுறை, முகக்கவசம் அணிந்துகொள்ளுமாறும் வெளிநாட்டில் இருந்து வாங்குவதைத் தவிர்க்குமாறும் பெய்ஜிங் மக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

