லண்டன்: ரஷ்யாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தற்காப்புக்காக உக்ரேனுக்கு குறுகிய தூரம் சென்று தாக்கும் கவச வாகன எதிர்ப்பு ஏவுகணைகளை பிரிட்டன் வழங்கவுள்ளது.
ரஷ்யா தனது எல்லையில் சுமார் 100,000 துருப்புக்களைக் குவித்ததை அடுத்து, பிரிட்டிஷ் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அத்தடன் சிறிய பிரிட்டிஷ் படை ஒன்றும் உக்ரேனுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் சொன்னார்.
உக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்கும் என்ற அச்சம் உள்ளதாக மேற்கத்திய நாடுகள் கூறின.
இதனை மறுத்து ரஷ்யா, மேற்கத்திய நாடுகள் உக்ரேனை ஆக்கிரமிப்பதாகக் குற்றம் சாட்டியது.