கொழும்பிற்கு கூடுதலாக ஐந்து விமானச் சேவைகளை வழங்கும் எமிரேட்ஸ்

எமிரேட்ஸ் விமான நிறுவனம், இலங்கை தலைநகர் கொழும்பிற்கு வரும் பிப்ரவரி 10ஆம் தேதிமுதல் கூடுதலாக ஐந்து விமானச் சேவைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் வாரந்தோறும் கொழும்பிற்கு 26 விமானச் சேவைகளை எமிரேட்ஸ் வழங்கும். மாலத்தீவுகள் தலைநகர் மாலேவுக்கும் கொழும்பிற்கும் இடையே தினசரி விமானச் சேவையும் அவற்றில் அடங்கும்.

எமிரேட்ஸ் வழங்கும் இந்தக் கூடுதல் விமானச் சேவைகள் ஒவ்வொரு செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறும்.

“எங்களுக்கு இலங்கை மிக முக்கியமான சந்தையாகும். அந்த வகையில், நாட்டின் வர்த்தகம் மற்றும் சுற்றுப்பயணத்துறையின் மீட்சிக்கு ஆதரவளிக்க முக்கிய பங்காற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். 2021ல் கிட்டத்தட்ட 200,000 சுற்றுப்பயணிகளை இலங்கை ஈர்த்தது. டிசம்பர், ஜனவரியிலும் அங்கு சுற்றுப்பயணிகளின் வருகை நம்பிக்கையளிக்கும் விதமாக உள்ளது,” என்றார் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான எமிரேட்ஸ் நிறுவனத்தின் வட்டார மேலாளர் சந்தனா டி சில்வா.

சரக்குகளை ஏற்றுமதி செய்யவும் அத்தியாவசிய மருந்துப் பொருள்களை இறக்குமதி செய்யவும் கூடுதல் இடவசதி வழங்க இந்தக் கூடுதல் விமானச் சேவைகள வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!