டோங்கா தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக எழுந்த உயரமான அலைகளால் கடலில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. பெரு நாட்டின் வென்டனிலா பகுதியில் உள்ள பெருவியன் கடற்கரையில் அவ்வாறு ஏற்பட்ட எண்ணெய்க் கசிவைத் தொழிலாளர்கள் சுத்தம் செய்தனர். இதற்கிடையே, உடனடி, முக்கிய தேவையான தண்ணீரை ஏற்றிச் செல்லும் நியூசிலாந்து கடற்படையின் இரண்டு கப்பல்கள் இன்று டோங்காவைச் சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது. பேரழிவால் வெளியான உப்பு நீர், டோங்கா தீவின் நீர் ஆதாரங்களை மாசுபடுத்தியதாக செஞ்சிலுவைச் சங்கம் உறுதிப்படுத்தியது. அந்தத் தீவில், இதுவரை கிருமித்தொற்று சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. ஆனால் கிருமிப் பரவல் பற்றிய அச்சம் நிவாரண உதவிகளைச் சிக்கலாக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
படம்: ராய்ட்டர்ஸ்