பாலி குண்டுவெடிப்பு: தீவிரவாதிக்கு 15 ஆண்டு சிறை

பாலி குண்டுவெடிப்பு: தீவிரவாதிக்கு 15 ஆண்டு சிறை

1 mins read
ec68fe13-84e4-41be-bca5-d808972c4b6d
தலைமறைவாக இருந்த தீவிரவாதி அரிஸ் சுமர்சோனோவை 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜகார்த்தா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கோப்புப்படம் -

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வின் பாலித் தீவில் நடந்த குண்­டு­வெடிப்பில் தொடர்­பு­டைய இந்­தோ­னீ­சிய தீவி­ர­வா­திக்கு ஜகார்த்தா நீதி­மன்­றம் 15 ஆண்டு சிறைத் தண்­டனை விதித்தள்ளது.

2002ஆம் ஆண்டு பாலித் தீவில் நடந்த குண்­டு­வெ­டிப்­பில் 202 பேர் மாண்­ட­னர்.

அந்தக் குண்­டு­வெ­டிப்பு தொடர்­பில் அல்­கொய்­தா­வு­டன் தொடர்­பில் இருந்த தீவி­ர­வாதி அரிஸ் சுமர்­சோ­னோ­வின் பெயர் சந்­தேக நபர்­கள் பட்­டி­ய­லில் சேர்க்­கப்­பட்­டது.

அதன் பிறகு கிட்­டத்­தட்ட 18 ஆண்­டு­க­ளா­கத் தலை­ம­றை­வாக இருந்த சுமர்­சோ­னோவை, 2020ஆம் ஆண்டு டிசம்­ப­ரில் போலி­சார் கைது செய்­த­னர்.

பாலி குண்­டு­வெ­டிப்பு மட்­டு­மல்­லா­மல், வேறு சில சதித் திட்­டங்­கள் தொடர்­பா­க­வும் சுமர்­சோனோ மீது சாட்­டப்­பட்ட குற்­றங்­கள் விசா­ரிக்­கப்­பட்­டன.