ஜகார்த்தா: இந்தோனீசியாவில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள் மக்களுக்கு போடுவதற்கு முன்பே காலா வதியானதால் குப்பையில் வீசப்பட்டன.
குறுகிய காலத்திற்குள் காலா வதியாகும் அவற்றை சில நாடுகள் இந்தோனீசியாவுக்கு நன்கொடையாக வழங்கியிருந்தன.
மொத்தம் 1.1 மில்லியன் தடுப்பூசிகள் குப்பையில் வீசப்பட்டன. அவற்றில் 98 விழுக்காடு தடுப் பூசிகள் ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதங்களில் காலாவதியாகக் கூடியவை. சில நாடுகள் அவற்றை நன்கொடையாக வழங்கியிருந்ததாக நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய இந்தோனீசிய சுகாதார அமைச்சர் புடி குனாடி சடிகின் தெரிவித்தார்.
பணக்கார நாடுகள் தேவைக்கு அதிகமாக தடுப்பூசிகளை வாங்கியதால் அவற்றை விரைவாக விநி யோகிக்கும் நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கின.
கடந்த ஆண்டு இறுதியில் நன் கொடையாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் இந்தோனீசியா வந்து சேர்ந்தன. ஆனால் இம்முறை நன்கொடையாக வழங்கப்படும் தடுப்பூசிகள் கவனமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று அைமச்சர் குறிப்பிட்டார்.
குைறந்தது மூன்று மாதம் அல்லது அதற்கும் மேற்பட்டு காலாவதியாகும் தடுப்பூசிகளை மட்டும் ஏற்றுக்கொள்வோம் என்று அவர் சொன்னார்.
இந்தோனீசியாவுக்கு அதன் கூடுதல்(பூஸ்டர்) தடுப்பூசித் திட்டத்திற்கு நூறு மில்லியன் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. தடுப்பூசிகளை கோவேக்ஸ் திட்டம் மூலம் இந்தோனீசியா பெற்று வருகிறது. எஞ்சியவை இரு தரப்பு ஒப்பந்தம் மூலம் பெறப்படுகின்றன.
நைஜீரியா, உகாண்டா போன்ற இதர சில நாடுகளும் குறுகிய காலத்தில் காலாவதியான தடுப்பூசிகளை குப்பையில் வீசி உள்ளன.