‘பயணக் கட்டுப்பாடுகளை நீக்க அல்லது தளர்த்த வேண்டும்’

அனைத்துலகப் பயணக் கட்டுப் பாடுகளை நீக்கும்படி அல்லது தளர்த்தும்படி உலக நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் ஆலோ சனை கூறியுள்ளது. உலக சுகா தார நிறுவனத்தின் அவசரநிலைக் குழு அதன் பரிந்துரைகளை தலைமை இயக்கு நரிடம் முன் வைத்தது. ஓமிக்ரான் பரவலால் பல நாடுகள் மீண்டும் பயணக் கட்டுப் பாடுகளைக் கடுமையாக்கி யுள்ள நிலையில் அனைத்துலகப் பயணங்கள் தொடர்பான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்று அனைத்துலக அளவில் பெரும் கவலைக்குரிய ஒன்று என்று இன்னமும் கருதுவதாக நிறுவனம் கூறியது. இருந்தபோதும், பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் ஆலோசனையை அது விடுத்து உள்ளது. கொவிட்-19 தடுப்பூசிகள் உலக மக்களுக்குக் கிடைப்பதில் சமநிலை இல்லை. இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டதாக சான்று அளித்தால் மட்டுமே வெளி நாடுகளுக்குப் பயணம் செய்ய முடியும் என்பதை ஒரே நிபந்தனை யாக முன்வைக்க முடியாது என்று அமைப்பு கூறியது.

முன்னதாக, பரிந்துரைகளை முன்வைத்த அவசரநிலைக் குழு, பயணக் கட்டுப்பாடுகளால் கூடு தல் பயன் இல்லை என்று கூறி யிருந்தது. உலக சுகாதார நிறுவனம் மேலும் சில ஆலோ சனைகளையும் முன்வைத்துள்ளது.

மேலும், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான கொவிட்-19 பரவல் பற்றி கூடுதல் ஆய்வுகள் நடத்தும்படி அது, உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!