வாஷிங்டன்: உக்ரேன் எல்லையில் 100,000க்கும் மேற்பட்ட வீரர்களை குவித்து வைத்திருக்கும் ரஷ்யா அந்நாட்டுக்குள் எந்த நேரத்திலும் நுழையலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்பார்க் கிறார்.
எல்லைகளுக்கு அப்பால் படைகளை அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புட்டினை வலி யுறுத்தி வருகின்றன.
ஆனால் அவர் உக்ரேனுக்குள் நுழைவார் என எதிர்பார்க்கிறேன் என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.
அதற்கான விலையை ரஷ்யா கொடுத்தே ஆக வேண்டும், அப்படிச் செய்ததற்காக அவர் வருத்தப்பட நேரிடும் என்றும் பைடன் மேலும் தெரிவித்தார்.