பெய்ஜிங்: சீனாவில் இன்னும் சில வாரங்களில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு தொடங்கவிருக்கிறது.
இந்நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் கொவிட்-19 தொற்று எதிர் பாராதவிதமாக அதிகரித்துள்ளதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குடியிருப்பாளர்கள் தேவையில்லாமல் ஒன்றுகூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொவிட்1-9 பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
புதன்கிழமை அன்று சமூகத்தில் மூவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதை பெய்ஜிங் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து பெய்ஜிங்கில் கிருமிப் பரவல் கட்டுக்குள் இருந்து வருகிறது.
இதுவரை பத்துக்கும் குறைவானர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலருக்கு டெல்டா, ஓமிக்ரான் தொற்று உள்ளது.
இதர நாடுகளுடன் ஒப்பிடுகையில் பெய்ஜிங்கில் பதிவான தொற்றுச் சம்பவங்கள் சொற்பமானது.
இருந்தாலும் கிருமி பரவாமல் இருக்க பெய்ஜிங் விழிப்புடன் இருந்து வருகிறது.
இந்த நிலையில் பெய்ஜிங்கின் அண்டை ஹெபேய் மாநிலத்தில் பிப்ரவரி 4ஆம் தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது.
சீனப் புத்தாண்டும் வருவதால் நாடு முழுவதும் தொற்று பரவலாம் என்ற அபாயமும் நிலவுகிறது.
இதற்கிடையே சேமிப்புக் கிடங்கு ஊழியர்கள் சிலர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் முழுமையாக கொவிட்-19 சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொருட்களையும் சோதனையிட வேண்டும் என்றும் அந்நகரத்தின் அரசாங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண் டது.