இரவும் பகலும் கடலில் தத்தளித்த ஆடவர்

டோங்காவைச் சேர்ந்த ஒருவர், ஏறக்குறைய 27 மணி நேரம் கடலில் தத்தளித்து உயிர் பிழைத்துள்ளார்.

கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு மரத் துண்டை பிடித்துக்கொண்டதால் அவரது உயிர் தெய்வாதீனமாகத் தப்பியது.

சனிக்கிழமையன்று டோங்கா தீவை சுனாமி தாக்கியதைத் தொடர்ந்து, 57 வயது லிசாலா கடலில் அடித்துச் செல்லப்பட்டார்.

பலமுறை கடலுக்குள் மூழ்கி பின்னர் வெளிவந்ததாக அவர் கூறினார். இறுதியாக ஒரு மரத்துண்டு கையில் தட்டுப்பட்டது.

மரத் துண்டுடன் அவர் உயிரையும் சேர்த்து கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்.

சுனாமியின் முதல் அலை தாக்கியபோது, அதிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு மரத்தில் ஏறிக்கொண்டதாக லிசாலா கூறினார்.

மரத்திலிருந்து கீழே இறங்கி வந்தபோது, இரண்டாவது பேரலை அடித்தது. அது அவரை கடலுக்கு இழுத்துச் சென்றது.

இறுதியில், மரத்துண்டின் உதவியுடன் சுமார் 7.5 கிலோமீட்டர் தூரம் மெல்லமெல்ல நீந்தி வந்துள்ளார். அவர் கரையை வந்து சேர 27 மணி நேரம் எடுத்தது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், லிசாலாவுக்கு உடற்குறை உள்ளது. அவருக்கு நடப்பதில் சிரமம் இருக்கிறது.

இருப்பினும், அவருடைய இந்தச் சாகச செயல், அவருக்கு 'ஆக்குவா மனிதன்', அதாவது கடல் மனிதன் எனும் பெயரைத் தந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!