சிட்னி: ஆஸ்திரேலியா செல்லும் அனைத்துலக விமானப் பயணிகள் இனி ஆன்டிஜென் பரிசோதனை மூலம் கிருமித்தொற்று இல்லை என்பதை உறுதி செய்தால் போதும் என்று கூறப்பட்டுள்ளது. புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட வேண்டும்.
புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு, அங்கீகரிக்கப்பட்ட விமான நிலைய பரிசோதனை மையத்தில் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சு கூறியது. இது ஞாயிறு நள்ளிரவு 1 மணி முதல் நடப்புக்கு வந்தது.
இதுவரை, புறப்படுவதற்கு மூன்று நாள்கள் முன்பு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று இருந்தது. பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதில் உள்ள சிரமங்களுக்கு மத்தியில் ஆஸ்திரேலியா இந்த மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
இதற்கிடையே, ஓமிக்ரான் பரவல் மோசமடைந்திருந்தாலும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவது ஒத்திவைக்கப்படாது என்று ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் அறிவித்துள்ளது.
ஆனால் குயின்ஸ்லாந்தில் இன்னும் இரண்டு வாரங்களில் கிருமி பரவல் உச்சமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அங்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவது இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.