கோலாலம்பூர்: மீண்டும் தேசிய இதயநோய் கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதுவின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மகள் மரினா சொன்னார்.
"ஜனவரி 8ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக அவர் தேசிய இதயநோய் கழகத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்
தது.
96 வயதாகும் மகாதீர், இச்சிகிச்சைக்குப் பிறகு ஜனவரி 13ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில், மீண்டும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் டாக்டர் மகாதீர் முகமதுவைப் பார்ப்பதற்காக, மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று பிற்பகல் தேசிய இதயநோய் கழகத்துக்குச் சென்றார்.
மகாதீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியைக் கேட்டு செய்தியாளர்களும் இதயநோய் கழக வளாகத்தில் குவிந்தனர்.