சிட்னி: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், குவீன்ஸ்லாந்து மாநிலங்களில் அடுத்த வாரம் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவுள்ளன.
இதையடுத்து மாணவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை கிருமித்தொற்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக மில்லியன் கணக்கான பரிசோதனை கருவிகள் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன. ஆசிரியர்களும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் முகக்கவசம் அணிவது அவசியம்.

