மியன்மார் ராணுவம்: பாத்திரத்தை தட்டி ஒலி எழுப்புவது தேசத் துேராக குற்றம்

மியன்மார் ராணுவம்: பாத்திரத்தை தட்டி ஒலி எழுப்புவது தேசத் துேராக குற்றம்

2 mins read
2737e8f3-48e1-41c3-a195-df3abfd6fa16
மியன்மார் ராணுவ ஆட்சிக்கு எதிராக கத்திரிக்கோல் கொண்டு ஒலி எழுப்பி ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு. படம்: ஏஎஃப்பி -

யங்கூன்: மியன்­மார் ராணுவ ஆட்சி மன்­றத்­துக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் பாத்­தி­ரங்­க­ளைத் தட்டி ஒலி எழுப்­பி­னால் அவர்­கள் மீது தேசத் துரோ­கக் குற்­றச்­சாட்டு பாயும் என்று மியன்­மார் ராணு­வம் எச்­ச­ரித்­துள்­ளது.

மியன்­மார் ராணு­வம் புரட்­சி­யின் மூலம் ஆட்­சியை சென்ற ஆண்டு பிப்­ர­வரி 1ஆம் தேதி கைப்­பற்­றிய ஆண்டு நிறைவு நெருங்­கி­வ­ரும் நிலை­யில் ராணுவ ஆட்சி மன்­றம் இந்த எச்­ச­ரிக்­கையை விடுத்­துள்­ளது நினை­வு­கூ­ரத்­தக்­கது.

மியன்­மார் ராணு­வம் ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­ய­தி­லி­ருந்து அந்­நாட்டு பொரு­ளி­யல் கடு­மை­யாக வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. ராணு­வப் புரட்­சிக்கு எதி­ரா­கக் கிளர்ந்­தெ­ழுந்த மக்­க­ளுக்கு எதி­ராக வன்­முறை கட்­ட­விழ்த்து விடப்­பட்­டது. இதில் பொது­மக்­களில் குைறந்­தது 1,500 பேர் இறந்­து­விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ராணு­வப் புரட்சி நடந்து ஓராண்டு ஆகி­யும் ராணு­வத்­தால் மக்­கள் எழுச்­சியை கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை. ஆங்­காங்கே மக்­கள், தற்­காப்புப் படை என்ற அமைப்பு ராணு­வம் மீது தாக்­கு­தல் நடத்தி வரு­கிறது.

இந்­தத் தாக்­கு­தல்­கள் அண்­மைய கால­மாக அதி­க­ரித்து வரு­வ­தா­க­வும் செய்­தித் தக­வல்­கள் கூறு­கின்­றன. மக்­கள் தற்­காப்பு படை மற்­றும் ஆங் சான் சூச்சி அம்­மை­யா­ரின் சக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அடங்­கிய தேசிய ஒற்­றுமை அர­சாங்­கம் என்ற அமைப்பு ஆகி­ய­வற்­றுக்கு ராணு­வம் தடை விதித்­துள்­ளது.

இதன் தொடர்­பில் ராணு­வம் நேற்று முன்­தி­னம் விடுத்த அறிக்­கை­யில், மக்­கள் தற்­காப்புப் படை­யும் தேசிய ஒற்­றுமை அர­சாங்க அமைப்­பும் பாத்­தி­ரங்­க­ளைத் தட்டி ஒலி எழுப்­பி­யும் அமைதி வழி­யில் வேலை­நி­றுத்­தம் செய்­தும் நாட்­டின் ஸ்தி­ரத்­தன்­மையை குலைப்­ப­தாக கூறி­யது.

ஆகையால், ஒலி எழுப்பி ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­ப­டு­வோர் மீதும் ராணு­வத்­துக்கு எதி­ராக பிர­சா­ரம் செய்­வோர் மீதும் பயங்­க­ர­வாத தடுப்­புச் சட்­டத்­தின்­கீழ் தேசத் துரோ­கக் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­ப­ட­லாம் என்று ராணு­வம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.