ஒரு வரி உலகச் செய்திகள்

ஒரு வரி உலகச் செய்திகள்

1 mins read
a9bb266d-60d8-4e30-936e-0308eee0df1f
-

 மலே­சி­யா­வில் சென்ற மாதம் பேர­ழிவை ஏற்­ப­டுத்­திய கன­மழை, வெள்­ளம் கார­ண­மாக 6.1 பில்­லி­யன் ரிங்­கிட்

(2 பில்­லி­யன் வெள்ளி) இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக மலே­சிய புள்­ளி­யி­யல் துறை தெரி­வித்­துள்­ளது. மிக­வும் பாதிக்­கப்­பட்ட சிலாங்­கூர் மாநிலம், ஒட்டுமொத்த பாதிப்பில் கிட்டத்தட்ட பாதியளவு இழப்பைச் சந்தித்துள்ளது.

வடகொரியா

2 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை, கடலில் செலுத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்தது. இந்த மாதத்தில் வடகொரியா நடத்திய 6வது ஏவுகணை சோதனை இதுவாகும்.

 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு ஐநா சபையின் மனித உரிமைகள் தலைவர் ஸின்ஜியாங்கிற்குச் செல்ல சீனா ஒப்புக் கொண்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. அங்கு மனித உரிமைகள் மீறப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஐநா அங்கு செல்கிறது.

 மடகாஸ்கர், மொஸாம்பிக், மலாவி ஆகிய தென் ஆப்பிரிக்க நாடுகளில் வீசிய அனா சூறாவளியால் கிட்டத்தட்ட 77 பேர் மாண்டுவிட்டனர்.