மணிலா: அடுத்த மாதம் முதல் சிங்கப்பூர் உள்ளிட்ட 150 நாடுகளில் இருந்து பிலிப்பீன்ஸ் செல்லும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை என்று அந்நாடு அறிவித்துள்ளது.
அங்கு ஓமிக்ரான் கிருமிப் பரவல் சற்று குறையத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து இந்நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
பிலிப்பீன்சில் ஏற்பட்டுள்ள தொற்று சம்பவங்கள் சமூகப் பரவல் என்றும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால் ஏற்பட்டவை அல்ல என ஆய்வுகள் கூறுவதாக சுகாதார அமைச்சர் சொன்னார்.
அத்துடன் உலகின் எல்லா இடங்களிலும் ஓமிக்ரான் கிருமி பரவியுள்ளதால், பயணத் தடையால் எந்தப் பலனும் இல்லை என்றும் அவர் சொன்னார். நேற்று அங்கு 18,000 பேர் தொற்றுக்கு ஆளாகினர். 10 நாட்களுக்கு முன் கிட்டத்தட்ட 40,000 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.

