'கொள்ளைநோய் முடிவுக்கு வருவதாக நினைப்பது ஆபத்து'

'கொள்ளைநோய் முடிவுக்கு வருவதாக நினைப்பது ஆபத்து'

2 mins read
0bbb8aee-b5b0-4e39-9d0b-5a144fd73185
-

லண்­டன்: கொள்­ளை­நோய் இறு­திக் கட்­டத்தை எட்­டி­விட்­டது என்று சென்ற வாரம் உல­கச் சுகா­தார நிறு­வ­னத்­தின் ஐரோப்­பிய தலை­வர் நம்­பிக்கை தெரி­வித்­தி­ருந்­த­தற்கு மத்­தி­யில் அவ்­வாறு நினைப்­பது ஆபத்­தா­னது என்று அந்­நி­று­வ­னத்­தின் உயர்­மட்ட தலை­வர்­கள் கூறி­யுள்­ள­னர்.

ஐரோப்­பிய தலை­வர் க்ளூக் அவ்­வாறு கூறி­யதையடுத்து, பேசிய நிறு­வ­னத்­தின் தலைமை இயக்­கு­நர் டெட்­ரேஸ் அத­னாம் கேபிரியசுஸ், "கொள்­ளை­நோய் இறு­திக்­கட்­டத்­திற்கு வந்­து­விட்­ட­தாக எண்­ணு­வது ஆபத்­தா­னது," என்று எச்­ச­ரித்­தார். அதே­ச­ம­யம் உல­கச் சுகா­தார நிறு­வ­ன­த்தின் ஐரோப்­பிய கிளையும் "கொள்­ளை­நோய் இன்­னும் முடி­ய­வில்லை," என்று கூறி­யுள்­ளது.

உரு­மா­றிய கிரு­மி­க­ளின் தொடர்ச்­சி­யான அச்­சு­றுத்­தல், உல­க­ளா­விய தடுப்­பூசி விகி­தம் ஆகி­ய­வற்­றின் கார­ண­மாக கொள்­ளை­நோய் இறு­திக் கட்­டத்­திற்கு வர­வில்லை என்­கிறது அறி­வி­யல் உல­கம்.

மற்­றொ­ரு­பு­றம், சென்ற இரண்டு ஆண்­டு­க­ளாக பொரு­ளா­தா­ரத்தை முடக்­கிய தொற்­று­நோயை மற்ற நோய்­க­ளைப் போன்று கையாள அர­சி­யல் தலை­வர்­கள் ஆர்­வ­மாக உள்­ள­னர்.

ஸ்பெ­யின் பிர­த­மர் பெட்ரோ சான்­செஸ், "கொள்­ளை­நோய் கட்­டத்­தைக் கடந்து, அதை நிரந்­தர நோயாகக் கையா­ளும் காலத்தை நோக்­கிச் செல்­கி­றோம்," என்­றார்.

லண்­டன் பல்­க­லைக்­க­ழ­கக் கல்­லூ­ரி­யின் உல­க­ளா­விய சுகா­தார தொற்­று­நோ­யி­யல் நிபு­ண­ரான பேரா­சி­ரி­யர் டிம் கோல்­போர்ன், "நிரந்­தர நோய் என்­பது கிரு­மி­யின் தீவி­ரம் குறை­வது அல்ல. நிரந்­தர நோய்க் காலம் என்­பது தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை பெரு­ம­ளவு அதி­க­ரிக்­கா­மல், நிலை­யான எண்­ணிக்­கை­யில் இருப்­பதே நிரந்­தர நோயா­கும்," என்று கூறி­னார்.

"நோயா­ளி­க­ளைச் சமா­ளிக்க முடி­யா­மல் மருத்­து­வ­ம­னை­கள் திண­றும் வரை நிரந்­த­ர­நோ­யாக கையா­ளும் காலம் வந்­து­விட்­ட­தாக கூற­மு­டி­யாது," என்­றார் லியூ­வன் பல்­கலைக்­க­ழ­கத்­தின் பேரா­சி­ரி­யர் மார்க் வான் ரான்ஸ்ட்.

நிரந்­தர நோய் என்­றால் அது அது கொடி­ய­தாக இருக்­காது என்று அர்த்­த­மல்ல என்­றும் நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர். காச­நோய், மலே­ரியா, எச்­ஐவி ஆகிய நோய்­க­ளால் மில்­லி­யன்­க­ணக்­கான உயி­ரிழப்பு­கள் ஏற்­ப­டு­வ­தை­யும் அவர்­கள் சுட்டி­னர்.