மெல்பர்ன்: ஆஸ்திரேலிய பொதுவிருது டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை அஷ்லிக் பார்ட்டி பட்டம் வென்றுள்ளார்.
இதன்மூலம் 42 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக தங்களது சொந்த நாட்டில் நடக்கும் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
1980ல் ஆஸ்திரேலியாவின் கிறிஸ் ஓ நெயில் என்பவரே ஆஸ்திரேலிய பொதுவிருது பட்டத்தை வென்றிருந்தார்.
நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டேனியல் கொலின்ஸை எதிர்கொண்டார் பார்ட்டி.
ஒரு மணி நேரம் 27 நிமிடம் நீடித்த இப்போட்டியில் காலின்ஸ் கடும் சவால் அளித்த போதிலும் இறுதியில் 6-3, 7-6 என்ற ஆட்டகணக்கில் பார்ட்டி அவரைப் போராடி வீழ்த்தினார்.
பார்ட்டிக்கு இது மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் வெற்றியாகும்.
இதற்கு முன்னதாக 2019ல் பிரெஞ்சு பொதுவிருது, 2021ல் விம்பிள்டன் என இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் பார்ட்டி வென்றுள்ளார். படம்: ஏஎஃப்பி

