கீவ்: உக்ரேன் எல்லையில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதற்கு மத்தியில், மேற்கத்திய தலைவர்கள் பதற்றத்தைத் தூண்டவேண்டாம் என்று உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தப் பதற்றம் தங்களது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் சொன்னார்.
பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மேக்ரானுக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு அவர் இவ்வாறு சொன்
னார்.
உரையாடலின்போது, பதற்றங்களைத் தணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட விருப்பம் இருப்பதையும் புட்டின் உறுதிப்படுத்தினார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உக்ரேனிலிருந்து அரசதந்திர அதிகாரிகளை மீட்டுக்கொண்டது தவறு என்றும் அவர் குறிப்பிட்டார்.
உக்ரேனிய மக்கள் பல ஆண்டுகளாக ரஷ்ய படையெடுப்பு குறித்த அச்சுறுத்தலில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் அவர் சுட்டினார்.
அதே சமயம், தங்கள் நாட்டின் மீது படையெடுக்கும் எண்ணம் இல்லை என்பதையும் ரஷ்யா நிரூபிக்க வேண்டும் என்றும் உக்ரேன் அதிபர் சொன்னார்.
இதற்கிடையே, உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தால் அது பயங்கரமானதாக இருக்கும் என்றும் அதனால் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் என்றும் அமெரிக்க ராணுவத் தளபதி மார்க் மில்லி கூறியுள்ளார்.

