உலகம் முழுவதும் 10 பில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் தரவுகள் கூறுகின்றன.
அதாவது இவற்றைக் கொண்டு உலகில் உள்ள 7.9 பில்லியன் மக்களுக்கு ஒரு தடுப்பூசியையாவது போட்டிருக்கலாம்.
ஆனால் உலகமக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் சமமாகச் சென்று சேரவில்லை.
உலகின் பணக்கார நாடுகளில் 77 விழுக்காட்டு மக்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியாவது போட்டுக்கொண்டுள்ளனர்.
ஆனால் வசதி குறைந்த நாடுகளில் பத்து விழுக்காட்டு மக்களுக்கு முதல் தடுப்பூசியே போடப்படவில்லை.
இதற்கிடையே, வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கூடுதல் தடுப்பூசி திட்டத்தை விரைந்து செயல்படுத்தி வருகின்றன. சில நாடுகள் நான்காவது தடுப்பூசியையும் போடத் தொடங்கியுள்ளன.
அதே வேளையில் ஆப்ரிக்காவிலும் சில ஆசிய நாடுகளிலும் பலர் முதல் தடுப்பூசிக்காக காத்திருக்கின்றனர். எல்லா தடுப்பூசிகளின் செயல்திறனும் ஒரேமாதிரியாக இல்லை.
தடுப்பூசிகளில் உள்ள ஏற்றதாழ்வினால், கிருமி தொடர்ந்து பரவும் சூழலும் புதுக் கிருமி வகைகளும் ஏற்படும் சாத்தியமும் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

