வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செல்லவிருந்த பாதையில் அமைந்திருந்த பாலம் ஒன்று பிட்ஸ்பர்க்கில் இடிந்து விழுந்தது.
இடிந்து விழுந்த பாலத்தின் இடிபாடுகளில் சில வாகனங்கள் சிக்கியிருந்ததை சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் காட்டின. இந்த விபத்தில் 10 பேர் லேசாக காயமடைந்தனர். உயிரிழப்பு இல்லை.
இது பனிப்பொழிவால் நேர்ந்த விபத்து என்ற சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர், பைடன் வரவிருந்த நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டது தற்செயலானது எனவும் சொன்னார்.
அமெரிக்காவின் உள்கட்டமைப்பு, பொருள் விநியோகம் ஆகியவற்றை வலுப்படுத்துவது குறித்து பேசுவதற்கு முன்னர், பிட்ஸ்பர்க்கில் உள்ள 'மில்16' எனும் ஆய்வு மையத்திற்கு பைடன் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

