கட்டாயத் தடுப்பூசிக்கு எதிரான ஆர்ப்பாட்டம்; தலைநகரிலிருந்து வெளியேறிய கனடியப் பிரதமர்

கட்டாயத் தடுப்பூசிக்கு எதிரான ஆர்ப்பாட்டம்; தலைநகரிலிருந்து வெளியேறிய கனடியப் பிரதமர்

1 mins read
b66dfe82-c7c7-4a37-a777-4ec0e8ed4f6e
கட்டாயத் தடுப்பூசிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஒட்டவாவில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள லாரிகள். இந்த ஆர்ப்பாட்டத்திற்காக 2,700க்கும் மேற்பட்ட லாரிகள் வரக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக அந்நாட்டு அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.படம்: ராய்ட்டர்ஸ் -

ஒட்­டாவா: பாது­காப்பு கார­ணங்­களுக்­காக கன­டி­யப் பிர­த­மர் ஜஸ்­டின் டுருடோ குடும்­பத்­து­டன் தலை­ந­கர் ஒட்­ட­வா­வில் இருந்து வெளி­யேறி உள்­ள­தா­கத் தக­வல்­கள் கூறு­கின்­றன.

கனடா எல்­லை­யைக் கடக்­கும் லாரி ஓட்­டு­நர்­கள் கட்­டா­யம் தடுப்­பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டு­ம் என கனடியப் பிர­த­மர் ஜஸ்­டின் டுருடோ அண்­மை­யில் அறி­விப்பு ஒன்றை வெளி­யிட்­டார். இந்த அறி­விப்­புக்கு பல­த்த எதிர்ப்புக் கிளம்பியது.

கடந்த இரண்டு நாள்­க­ளாக ஓட்­டு­நர்­கள் தங்­கள் லாரி­யோடு ஒட்­ட­வா­வில் உள்ள நாடா­ளு­மன்ற வளா­கத்­திற்கு அருகே குவிந்து வரு­கின்­ற­னர்.

உறைய வைக்­கும் மைனஸ் 21 டிகிரி செல்­சி­யஸ் கடுங்குளிரிலும் கிட்­டத்­தட்ட 2,700 லாரி­கள் அந்த இடத்­திற்கு வந்­த­டை­யக்­கூடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வதாக அர­சாங்­கத் தக­வல்­கள் கூறு­கின்­றன.

இதற்­கி­டையே, ஆர்ப்­பாட்­டம் தொடர்­பாக சமூக ஊட­கங்­களில் பயன்­ப­டுத்­தப்­பட்ட சில வன்­முறை வார்த்­தை­கள், போலி­சார் மத்­தி­யில் நக­ரின் பாது­காப்பு குறித்த கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

எனவே ஒட்­ட­வா­வில் இருந்து தனது குடும்­பத்­து­டன் வெளி­யே­றி­யுள்ள கன­டி­யப் பிர­த­மர் ஜஸ்­டின் டுருடோ பாது­காப்­பான இடத்­தில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக சிபிசி செய்தி கூறு­கிறது.

பிர­த­மர் அலு­வ­ல­கம் இது­குறித்து கருத்து தெரி­விக்க மறுத்து­விட்­டது.