மலேசியாவில் போக்குவரத்து நெரிசல்

மலேசியாவில் போக்குவரத்து நெரிசல்

1 mins read
346dd351-7be3-45cf-9501-e2adcc5cf2bb
-

கோலாலம்பூர்: சீனப் புத்­தாண்டு விடு­மு­றையை முன்­னிட்டு மலே­சி­யா­வில் மக்­கள் பல­ரும் சொந்த ஊர்­க­ளுக்­குத் திரும்­பு­வ­தால் அந்­நாட்­டின் பிர­தான நெடுஞ்­சாலை­களில் நேற்று முன்தினம் போக்­கு­வ­ரத்து நெரி­சல் அதி­க­ரித்­தது. அன்றைய நாளில் ஏறக்­கு­றைய 4.6 மில்­லி­யன் வாக­னங்­கள் சென்­ற­தாகக் கூறப்படுகிறது.

சீனப் புத்­தாண்­டிற்கு இன்­னும் ஒரு­நாள் மட்­டுமே உள்ள நிலை­யில், நேற்றும் இன்றும் கூடு­தலான வாக­னங்­கள் சாலை­களில் செல்­லும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மலே­சிய சீனர்­கள் தங்­க­ளது சொந்த ஊர்­களில் புத்­தாண்­டைக் கொண்­டா­டு­வது ஈராண்­டு­களில் இதுவே முதன்­முறை. கிருமிப் பர­வல் கார­ண­மாக, கடந்த ஆண்டு சீனப் புத்­தாண்டு காலத்­தில் மலே­சி­யா­வில் மாநி­லங்­களுக்கு இடையே பயணத் தடை இருந்தது.