'மனிதாபிமான உதவி பெருமளவில் தேவை'

'மனிதாபிமான உதவி பெருமளவில் தேவை'

1 mins read
71d385b7-52d9-4c43-8e6c-6c81566492b4
-

யங்கூன்: மியன்­மா­ரில் ராணு­வப் புரட்சி ஏற்­பட்டு, இன்­றோடு ஓராண்டு ஆகி­யுள்ள நிலை­யில், அங்கு மனி­தா­பி­மான உத­விக்­கான தேவை பெருமளவில் அதி­க­ரித்து வரு­கிறது என்று மியன்­மார் மனித உரி­மைகளுக்கான ஐநா­வின் சிறப்பு அதி­கா­ரி­யான தாமஸ் ஆண்ட்­ரூஸ் சொன்­னார்.

"மியன்­மா­ரின் நிலைமை மிக­வும் மோச­ம­டைந்து வரு­கிறது. மனி­தா­பி­மான உத­வி­கள் கிடைப்­ப­தில் குறிப்­பி­டத்­தக்க சவால்­கள் உள்­ளன," என்­றார் அவர்.

சென்ற ஆண்டு டிசம்­பர் மாதம் முதல் கயா, கயின் மாநி­லங்­களில் ராணு­வப் படைக்­கும் உள்­ளூர் ஆயுதப் படைகளுக்கும் இடையே மோதல் தீவி­ர­ம­டைந்­துள்­ள­தாக ஐநா அண்­மை­யில் கூறி­யி­ருந்­தது.

சென்ற ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு மட்­டும் கிட்டத்தட்ட 181,400 பேர் தங்­கள் வசிப்­பி­டங்­களை­விட்டு வெளி­யே­றி­யுள்­ள­னர்.