நியூயார்க்: கல்வி உதவித்தொகைக்குத் தகுதி பெற்றுள்ளதாக கிட்டத்தட்ட 5,500 மாணவர்களுக்குத் தவறுதலாக மின்னஞ்சல் அனுப்பிவிட்டதாக அமெரிக்காவின் ஆக்லாந்து பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
நான்காண்டு கல்விக்கான 48,000 டாலர் (65,000 வெள்ளி) உதவித்தொகை அந்த மாணவர்களுக்குக் கிடைக்கும் என்று முதலில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள், அது தவறான தகவல் என்று இன்னொரு மின்னஞ்சலும் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டது.
இதுவரை 162 மாணவர்கள் மட்டுமே உதவித்தொகைக்குத் தகுதி பெற்றுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
நான்காண்டு கல்வி கட்டணமாக 58,000 டாலரும் தங்குமிட செலவாக 11,192 டாலரும் அந்த பல்கலைக்கழகத்தில் வசூலிக்கப்படுகிறது.

