ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பாலி தீவிற்கு வெளிநாட்டுப் பயணிகள் படிப்படியாக அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டின் மூத்த அமைச்சர் ஒருவர் நேற்று சொன்னார்.இத்திட்டம் இம்மாதம் 4ஆம் தேதி தொடங்கவுள்ளது.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளி நாட்டுப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் காலம் ஏழிலிருந்து ஐந்து நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக கடல்சார் விவகாரங்கள், முதலீட்டுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுட் பாண்டிஜைதன் நேற்று சொன்னார்.
இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் தொற்றுச் சம்பவங்கள் கடந்த சில நாள்களாக அதிகரித்துள்ளன.