சிட்னி: கோடை விடுமுறைக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவின் சில மாநிலங்களில் பள்ளிக்கூடங்கள் இந்த வாரம் முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.
அங்கு தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருந்தாலும் பள்ளிக்கூடங்கள் எதிர்கொள்ளக்கூடிய ஆசிரியர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் அந்நாடு தயாராக உள்ளது.
"ஆரம்பத்தில் சில வாரங்களுக்குச் சவால்கள் இருக்கும்," என்றார் விக்டோரியா மாநில முதல்வர் ஜேம்ஸ் மெர்லினோ.
ஆசிரியர்கள் சிலர் வேலைக்குத் திரும்பமுடியாமல் போகும்போது, பள்ளிக்கூடங்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு ஏதுவாக, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் 350 பேர் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
பெரிய பிள்ளைகள் முகக்கவசம் அணிவது கட்டயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ள ஆன்டிஜென் கருவிகளைக் கொண்டு மாணவர்கள் வாரத்திற்கு இருமுறை கிருமித்தொற்று பரிசோதனை செய்யவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐந்து முதல் 11 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளில் 40 விழுக்காட்டினர் முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
நேற்று அங்கு 34,000 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகினர். இது கடந்த ஒரு மாதத்தில் அங்கு பதிவான ஆகக் குறைவான எண்ணிக்கையாகும். நேற்று 44 பேர் கிருமித்தொற்று காரணமாக மாண்டனர். இது இரண்டு வாரங்களில் ஆகக் குறைவாகும்.

