பலு: இந்தோனீசியாவில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக டயரில் சிக்கிக்கொண்டிருந்த முதலை விடுவிக்கப்பட்டு, மீண்டும் தண்ணீருக்குள் விடப்பட்டது.
சுலாவேசி தீவிலுள்ள பலு நகரில் வசிப்பவர்கள் சென்ற 2016ஆம் ஆண்டு முதலை ஒன்றின் கழுத்தில் மோட்டார் சைக்கிள் டயர் சுற்றியிருப்பதைக் கண்டனர்.
அப்போது முதல் சுற்றுச்சூழல் ஊழியர்கள் முதலையை ஆற்றில் இருந்து இழுக்க முயன்று வந்தனர். ஆனால், உள்ளூர்வாசியான 34 வயது டிலி கோழியை இறையாகப் பயன்படுத்தி, மற்றவர்களின் உதவியோடு முதலையைக் கரைக்கு இழுத்து அதன் டயரை வெட்டி எடுத்தனர்.

