ஸ்டாக்ஹோம்: எஞ்சியிருந்த சில கொவிட்-19 கட்டுப்பாடுகளையும் கைவிட்டுவிட்டது சுவீடன்.
கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பொறுமை வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறும்போதிலும் சுகாதார கட்டமைப்பின் மீதான நெருக்கடி அதிகமாக உள்ள நிலையிலும் அந்நாடு கிருமித்தொற்று பரிசோதனையையும் நிறுத்தியுள்ளது.
அங்கு எத்தனை பேர் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பது தெரியாது.
பரிசோதனையால் ஏற்படும் நன்மைகளோடு ஒப்பிடும்போது பரிசோதனைக்காக செலவிடப்படும் தொகை மிகவும் அதிகம் என்று சுவீடன் சுகாதார அமைச்சு கூறியது.
"கொள்ளைநோய் முடிந்துவிட்டது என்றே கூறுவேன்," என்றார் சுகாதார அமைச்சர் லீனா ஹாலெங்க்ரென். இனி கொவிட்-19 ஆபத்தான நோயாக வகைப்படுத்தப்படாது என்றும் அவர் கூறினார்.
இனி அங்கு, வர்த்தகங்கள் இரவு 11 மணிக்குப் பிறகும் செயல்படும். ஒன்றுகூடுவோர் எண்ணிக்கையிலும் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.

