துபாய்: துபாயில் வரும் 15ஆம் தேதிக்குள் அனைத்து நடவடிக்கைகளும் படிப்படியாக வழக்கநிலைக்குத் திரும்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுச் சம்பவங்கள் குறைந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டின் தேசிய அவசரகால நெருக்கடி, பேரிடர் மேலாண்மை ஆணையம் சொன்னது.
இருப்பினும், முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கை களை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியது.

