ஜகார்த்தா: 'பாமாயில்' எனும் செம்பனை எண்ணெய் ஏற்றுமதியில் உலகின் ஆகப்பெரிய நாடான இந்தோனீசியாவில், சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல் பாமாயில் எண்ணெய் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது.
அனைத்துலகச் சந்தையில் பொருள்களின் விலை உயர்வுக்கு மத்தியில் உள்ளூர்வாசிகள் அதிக பாமாயிலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
அத்துடன் பயோடீசல் உற்பத்திக்கும் பாமாயில் பயன்படுத்தப்படுகிறது.
எனவே, உள்ளூர் சந்தையில் பாமாயில் எண்ணெய்க்குத் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் எண்ணெய் 20,000 ரூப்பியாவாக உயர்ந்துள்ளதாக சொன்னார் எண்ணெய்ப் பலகார விற்பனையாளர் ஒருவர்.
ஒருவருக்கு 2 லிட்டர் எண்ணெய் மட்டுமே விற்க கடைகளில் கட்டுப்பாடுகள் உள்ளதாக சொன்ன குடும்பத் தலைவி ஒருவர், "பாமாயில் எண்ணெய் கிடைப்பது இப்போது தங்கத்தை வாங்குவதைப் போன்றுள்ளது," என்றார்.

