கோத்தா கினபாலு: நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் உடைமைகள் வைக்கப்படும் இடத்தில் இருந்த பாம்பு அனைவரையும் திடுக்கிட வைத்தது.
கோலாலம்பூரிலிருந்து சாபா மாநிலத்தின் தவாவ் நகரம் நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த ஏர் ஏஷியா விமானம் இதன் காரணமாக பாதியிலேயே தரையிறங்கியது.
விமானத்தில் உடைமைகள் வைக்கப்படும் பகுதியில் பாம்பின் உருவம் தென்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
பயணிகளின் பாதுகாப்பைக் கருதி, விமானம் தவாவ் நகருக்குச் செல்லாமல், கூச்சிங்குக்குத் திசை திருப்பப்பட்டதாக ஏர் ஏஷியா நிறுவனம் கூறியது.
விமானத்தில் புகைமூட்டி பாம்பை பிடிப்பதற்கு ஏதுவாக, விமானத்தை உடனடியாக கூச்சிங்கில் தரையிறக்க விமானி முடிவு செய்ததாக ஏர் ஏஷியா நிறுவனம் விளக்கியது.
பயணிகள் வேறு விமானத்தின் மூலம் தங்கள் பயணத்தைத் தொடர்ந்ததாகவும் ஏர் ஏஷியா கூறியது. இதுபோன்ற சம்பவங்கள் மிக அரிது என்று நிறுவனம் சொன்னது.

