மாஸ்கோ: கிரைமியா தீபகற்பத்துக்கு அருகில் ரஷ்யாவின் கடற்
படையைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் போர்ப் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கிஇருப்பதாக ரஷ்ய ஊடகம் நேற்று தெரிவித்தது. 2014ஆம் ஆண்டில் உக்ரேனிடமிருந்து கிரைமியாவை ரஷ்யா கைப்பற்றியது.
உக்ரேனில் எந்நேரமும் போர் வெடிக்கக்கூடும் என்று மேற்கத்திய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ரஷ்யக் கடற்படை போர்ப் பயிற்சியைத் தொடங்கி
உள்ளது.
உக்ரேனின் எல்லையோரம் ரஷ்யா அதன் ராணுவ வீரர்களைக் குவித்து வரும் நிலையில், அவர்
களது நடமாட்டத்தை மேற்கத்திய நாடுகள் மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.
உக்ரேனைத் தாக்க திட்டம் கொண்டிருக்கவில்லை என்று ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது. நேட்டோ படைக்கு எதிராகத் தனது பாதுகாப்பை வலுப்படுத்துவதாக அது தெரிவித்தது.
கிரைமியாவின் கடலோரப் படையைப் பாதுகாப்பதே இந்தப் போர்ப் பயிற்சிகளின் இலக்கு என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. அத்துடன் ரஷ்யப் பொருளியலையும் கடற்
படையில் தொடர்புகளையும் பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப்படுவதாக அது கூறியது.
தனது கடற்படை இம்மாதமும் அடுத்த மாதமும் முழுவீச்சுடன் போர்ப் பயிற்சியில் ஈடுபடும் என்று ரஷ்யா கடந்த மாதம் அறிவித்
திருந்தது.
பசிபிக் கடலிலிருந்து அட்லாண்டிக் கடல் வரை போர்ப் பயிற்சிகள் நடத்தப்படும் என்று அது தெரிவித்தது.
இதற்கிடையே, அடுத்த வாரத்துக்குள் ரஷ்யா உக்ரேனைத்
தாக்கக்கூடும் அல்லது உக்ரேனில் உள்நாட்டுப் போரை அது ஏற்படுத்த முயற்சி செய்யக்கூடும் என்று
அமெரிக்கா எச்சரித்துள்ளது.
சீனாவில் நடைபெற்று வரும் பனிக்கால ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு, ரஷ்யா தாக்குதலை நடத்தக்கூடும் என்று பல நாடுகள் நம்பு வதாகவும் அதற்கு மாறாக போட்டி கள் நடந்துகொண்டிருக்கும்போதே போர் தொடங்கும் சாத்தியம் இருப்பதாகவும் அமெரிக்கா கூறியது.
இதன் காரணமாக உக்ரேனில் இருக்கும் தங்கள் நாட்டினரை
அங்கிருந்து வெளியேறும்படி
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கேட்டுக்கொண்டுள்ளன.
உக்ரேனில் இருக்கும் அமெரிக்கர்கள் அடுத்த 48 மணி நேரத்துக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் போர் தொடங்கிய பிறகு அமெரிக்க ராணுவம் அவர்களை அங்கிருந்து மீட்காது என்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் தெரிவித்தார்.

