கோலாலம்பூர்: தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதை திட்டத்தின்கீழ் (விடிஎல்) மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே விமானச் சேவைகள் வழங்கப்படுகின்றன.
சீனப் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு மலேசியா-சிங்கப்பூர் விடிஎல் விமானச் சேவைக்கான தேவை அதிகரித்தது.
அதே சமயம் ஓமிக்ரான்
கிருமிப் பரவலால் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏற்றம் கண்டது.
இதனால் விமானங்களில்
பயணம் செய்யக்கூடிய பயணி
களின் எண்ணிக்கை 50 விழுக்காடு குறைக்கப்பட்டது.
இதன் விளைவாக அதற்கான பயணச்சீட்டுகளின் கட்டணம்
அதிகரித்தது.
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே பயணிகள் நிலம் வழியாக விடிஎல் திட்டத்தின்கீழ் பேருந்துகளைப் பயன்படுத்தி
பயணம் செய்யலாம்.
ஆனால் இந்தப் பேருந்துகளில் பயணம் செய்யக்கூடிய பயணி
களின் எண்ணிக்கையும் பாதி
யாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஒருநாளைக்கு 48 விடிஎல் பேருந்துச் சேவைகள் வழங்கப்
படுகின்றன. அவற்றில் தினந்
தோறும் ஏறத்தாழ 2,300 பயணிகள் பயணம் செய்கின்றனர்.
மார்ச் மாதம் வரை அனைத்துப் பேருந்துப் பயணச்சீட்டுகளும் விற்கப்பட்டுவிட்டதாக விடிஎல் திட்டத்தின்கீழ் பேருந்துச் சேவை வழங்கும் டிரான்ஸ்டார் டிராவல், காஸ்வே லிங்க் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்தன.
விமானப் பயணச்சீட்டுகளின் கட்டணம் அதிகரிப்பின் காரணமாக சிங்கப்பூரில் தங்கள் உறவினரின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனதாக மலேசியரான 69 வயது திரு ஜோசஃப் சூசை தெரிவித்தார்.
விமானப் பயணச்சீட்டுகளின் விலை மட்டுமின்றி கொவிட்-19 பரிசோதனைக்கான செலவுகளையும் கருத்தில் கொண்டு அவர் சிங்கப்பூருக்கு வரவில்லை.
அத்துடன், விமானத்தில் பயணம் செய்யும்போது தமக்கும் தமது 60 வயது தங்கைக்கும் கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதைக் கருத்தில் கொண்டு சிங்கப்பூருக்குப் பயணம் மேற் கொள்ள எடுத்த முடிவை மாற்றிக் கொண்டதாக அவர் கூறினார்.
அதிக செலவு, கட்டுப்பாடுகள் ஆகியவை காரணமாக பயணத் திட்டத்தைக் கைவிட்டதாக திரு சூசை கூறினார்.