ஜாவா: பேரலைக்கு 10 பேர் பலி

ஜாவா: பேரலைக்கு 10 பேர் பலி

1 mins read
24e3de4c-bba6-40a1-a3e9-e1c32ccc0970
இச்சம்பவம் இந்தோனீசியாவின் கிழக்கு ஜாவா மாநிலத்தில் உள்ள பயங்கான் கடற்கரையில் நிகழ்ந்தது. படம்: 'கூகிள் மேப்ஸ்' -

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வின் கடற்­க­ரை­யில் தியா­னம் செய்­து­கொண்­டி­ருந்­தோ­ரில் குறைந்­தது 10 இந்தோனீசியர்கள் பேர­லை­களில் சிக்கி மாண்­ட­னர் என்று காவல்­து­றை­தெரி­வித்­துள்­ள­து. இச்­சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் பின்­னி­ர­வில் நிக­ழ்ந்­தது.

கிழக்கு ஜாவா மாநி­லத்­தில் உள்ள பயங்­கான் கடற்­க­ரை­யில் 23 பேர் அவ­ர­வர் கைக­ளைப் பிடித்­துக்­கொண்டு தியானத்­தில் ஈடு­பட்­ட­னர். அவர்­கள் கட­லுக்கு அரு­கில் இருந்­த­தா­க­வும் பேர­லை­கள் கரையை நோக்கி வந்­த­போது அவர்­க­ளால் தங்­க­ளைக் காப்­பாற்றிக்­கொள்ள முடி­ய­வில்லை என்­றும் காவல்­து­றை­யி­னர் கூறி­னர்.

ஆகக் கடைசி நில­வ­ரப்­படி 10 பேரின் உடல்­கள் மீட்­டெ­டுக்­கப்­பட்­டன. 12 பேர் உயி­ரு­டன் மீட்­கப்­பட்­ட­னர். 40 வயது ஆட­வர் ஒரு­வ­ரைக் காண­வில்லை.

சம்­பந்­தப்­பட்ட அனை­வ­ரும் ஒரு சடங்­கில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். அச்­ச­டங்கு குறித்த மேல்­வி­வ­ரங்­கள் இல்லை. எனி­னும் சடங்கை வழி­ந­டத்­திய ஆன்­மீக குரு உயிர் பிழைத்­த­தா­க­வும் அவரை விசா­ரிக்­கப்­போ­வ­தா­க­வும் காவல்­துறை சொன்­னது.