மலேசியாவில் 130,000 குழந்தைகளுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது

மலேசியாவில் 130,000 குழந்தைகளுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது

2 mins read
c1b354db-117c-4e8e-ae9d-3cdb5e43f548
தமது பிள்ளைக்குத் தடுப்பூசி போடும் பெற்றோர். ஐந்து முதல் 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் இயக்கத்தை இம்மாதம் 3ஆம் தேதி மலேசிய அரசாங்கம் தொடங்கியது. கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் -

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் 130,000க்கும் மேற்­பட்ட குழந்­தை­ க­ளுக்கு முதல் தடுப்­பூசி போட்டு முடிக்­கப்­பட்­டுள்­ளது.

இது, சனிக்­கி­ழமை வரை­யி­லான நில­வ­ர­மா­கும். ஐந்து முதல் 11 வயது வரை­யி­லான குழந்­தை­க­ளுக்குத் தடுப்­பூசி போடும் இயக்­கம் ஒன்­பது நாட்­க­ளுக்கு முன்பு தொடங்­கி­யது.

இந்த எண்­ணிக்கை, ஐந்து முதல் 11 வயது வரை­யி­லான மொத்த குழந்­தை­களில் 3.8 விழுக்­காடு என்று அர­சாங்­கத்­தின் 'கொவிட்­நவ்' இணை­யப்­பக்­கம் தெரி­வித்­தது.

இம்­மா­தம் 7ஆம் தேதி வரை அந்­த வய­துப் பிரி­வில் உள்ள 3.6 மில்­லி­யன் குழந்­தை­களில் 663,641 குழந்­தை­கள் தடுப்­பூ­சிக்குப் பதிந்து கொண்­டுள்­ள­னர்.

எட்டு வார இடை­வெ­ளி­யில் அவர்­க­ளுக்கு இரண்டு முறை தடுப்­பூசி போடப்­பட்டு வரு­கிறது. தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது கட்­டா­ய­மல்ல என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் பெற்­றோர்­ தங்­க­ளு­டைய குழந்­தை­க­ளுக்கு தடுப்­பூ­சிக்குப் பதிந்­து­கொள்ள சுகா­தார அதி­கா­ரி­கள் ஊக்­கு­வித்து வரு­கின்­ற­னர்.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர் களில் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீனின் ஆறு வயது மகனும் ஒருவர்.

மலேசியாவில் கடந்த ஆறு மாதங்­களில் ஐந்து முதல் 11 வயது வரை­யி­லான 26 குழந்­தை­கள் கொவிட்-19 தொற்றுக்கு பலி­யா­கி­விட்­ட­னர். இதே காலக்­கட்­டத்­தில் 147,282 குழந்­தை­கள் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர். இவர்­க­ளுக்கு அடுத்­தப­டி­யாக 12 முதல் 17 வயது வரை 90 விழுக்­காடு குழந்­தை­ களுக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டு உள்­ளதை அந்­நாட்­டின் புள்ளி விவ­ரங்­கள் காட்டுகின்றன. இதே­போன்று பெரி­ய­வர்­களில் 97.5 விழுக்­காட்­டி­ன­ருக்கு மேல் இரண்டு முறை தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

பெரி­ய­வர்­களில் பாதிப்பேருக்கு அதா­வது 56 விழுக்­காட்­டி­ன­ருக்கு பூஸ்­டர் தடுப்­பூ­சி­யும் போடப்­பட்­டுள்­ளது. மலேசியாவில் 21,072 புதிய கொவிட்-19 சம்பவங்கள் ஏற்பட்டு உள்ளதாக ஞாயிறு வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.