வாஷிங்டன்: அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தின் பயணி ஒருவர் விமானி அறைக்குள் நுழைய முயற்சி செய்ததால் பதற்றமும் குழப்பமும் ஏற்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்ற ஞாயிற்றுக்கிழமை மதியம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து வாஷிங்டன் நகரை நோக்கி அந்த விமானம் பறந்தது.
அப்போது பயணி ஒருவர் வலுக்கட்டாயமாக விமானி அறைக்குள் நுழைய முயற்சி செய்ததோடு அவ சரக் கதவையும் திறக்க முயன்றார்.
இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
விமானச் சிப்பந்திகளும் சில பயணிகளும் ஒன்றுசேர்ந்து அவரை மடக்கி தரையில் அழுத்திப் பிடித்தனர்.
கன்சாஸ் சிட்டியில் தரை இறங்கியதும் அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமெரிக்க ஏர்லைன்ஸ், நெருக்கடியான சூழ்நிலையை விமானச் சிப்பந்திகள் திறமையாக கையாண்டதாக தெரிவித்தது.
அதே விமானத்தில் பயணம் செய்த வாஷிங்டனைச் சேர்ந்த 37 வயது மோவாஸ் மோஸ்டஃபா, விமானி அறைக்குள் ஒரு பயணி நுழைய முயற்சி செய்தார் என்றார்.
"அவசர கதவை அவர் திறக்க முயற்சி செய்தார். விமானத்தின் பின்பக்கத்திற்கு ஓடிச் சென்று காப்பிக் குவளையைக் கொண்டுவந்த விமானச் சிப்பந்திகளில் ஒருவர், அவரது தலையில் பலமுறை தாக்கினார்," என்று மோவாஸ் மோஸ்டஃபா மேலும் தெரிவித்தார்.

