நியூயார்க்: நியூயார்க் மேன்ஹாட்டனில் உள்ள ஒரு வீட்டில் 35 வயது பெண் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.
ஆசியாவைச் சேர்ந்த 35 வயது பெண்ணை மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து வந்து கத்தியால் குத்தியதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமதி கிறிஸ்டினா யுனா லீ என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்ட பெண், நியூயார்க் நகரில் தாக்குதல் அல்லது கொல்லப்பட்ட ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த அண்மைய நபர் ஆவார்.
கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சியில் திருமதி கிறிஸ்டினா லீயை சைனாடவுன், கிறிஸ்டை ஸ்திரீட்டில் உள்ள அவரது வீடு வரை ஒருவர் பின்தொடர்ந்து செல்வது தெரிகிறது.
மாலை 4.30 மணிவாக்கில் திருமதி லீ தமது வீடு உள்ள கட்டடத்துக்குள் நுழைகிறார். அதன் பிறகு திருமதி லீ கேமராவில் பதிவாகவில்லை. அவரைப் பின்தொடர்ந்தவர் ஆசாமட் நாஷ், 25 என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சத்தம் கேட்டதால் குடியிருப்பாளர்கள் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், வீட்டுக்குள் நுழைந்தபோது குளியல் தொட்டியில் திருமதி லீ மாண்டு கிடந்தார்.
பின்பக்கம் கதவு வழியாக தப்ப முடியாத நாஷ் வீட்டுக்குள் சிக்கிக் கொண்டார். அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாஷ் ஏற்கெனவே காவல்துறை யினரால் கைது செய்யப்பட்டவர்.
கடந்த செப்டம்பரில் கிராண்ட் ஸ்திரீட் நிலையத்திற்கு அருகே இருந்த கட்டடத்தில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் அவர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
திருமதி லீயை கொல்வதற்கான அவரது நோக்கம் தெரியவில்லை. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.