நாளை மறுநாள் முதல் மீண்டும் சிங்கப்பூர்-பாத்தாம் படகு பயணம்

நாளை மறுநாள் முதல் மீண்டும் சிங்கப்பூர்-பாத்தாம் படகு பயணம்

2 mins read
db748aaa-650e-466d-aa48-3fdf139c9472
-

ஜகார்த்தா: சிங்­கப்­பூர், இந்­தோ­னீ­சியா ஆகி­ய­வற்­றின் இரு­த­ரப்பு பயண ஏற்­பாட்­டின்­கீழ், இந்­தோ­னீ­சி­யா­வின் பாத்தாம், பிந்­தான் தீவு­களுக்­கான படகு பய­ணம் சிங்­கப்­பூ­ரின் தானா மேரா படகு முனை­யத்­தில் இருந்து நாளை மறு­நாள் முதல் மீண்­டும் தொடங்­கு­கிறது.

மெய்­நி­கர் சந்­திப்பு ஒன்­றில், இந்­தோ­னீ­சி­யா­வின் பொரு­ளி­யல் விவ­கா­ரங்­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­சர் ஏர்­லங்கா ஹர்­டர்ட்டா இதனைச் சொன்­னார்.

இரண்டு தடுப்­பூ­சி­கள் போட்­டுக்­கொண்­ட­தோடு, சிங்­கப்­பூ­ரில் 14 நாள்­கள் தங்­கி­யி­ருந்­த­வர்­கள் மட்­டுமே தனி­மைப்­ப­டுத்­தல் இல்லா இப்­ப­ய­ணத்­திற்­குத் தகுதி பெற முடி­யும்.

தற்­போ­தைக்கு நாளொன்­றுக்கு ஒரு படகு பய­ணத்­திற்கு மட்­டுமே ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது என்று சிஎன்ஏ ஊட­கத்­தி­டம் பேசிய பாத்தா­மில் செயல்­படும் சொகுசு ஓய்­வு­வி­டுதி ஒன்­றின் தலை­வ­ரான ஆண்டி ஃபோங் சொன்­னார்.

240 பேர் செல்­லக்­கூ­டிய பட­கில் கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக 120 பேர் மட்­டுமே அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என்­றார் அவர்.

சுகா­தார நெறி­மு­றை­கள் நடை­மு­றை­கள் பின்­பற்­றப்­ப­டு­வதை உறுதி செய்­யும் வகை­யில், சிங்­கப்­பூ­ரில் இருந்து செல்­லும் சுற்­று­லாப் பய­ணி­கள், உள்­நாட்டுச் சுற்­று­லாப் பய­ணி­க­ளி­ட­மி­ருந்து பிரித்து வைக்­கப்­ப­டு­வார்­கள் என்று அவர் மேலும் கூறி­னார்.

தானா மேரா­வில் இருந்து நோங்­கஸ்­பு­ரா­விற்­குத் தின­மும் பிற்­ப­கல் 3 மணிக்­கும் பாத்தா­மின் நோங்­கஸ்­பூ­ரா­வில் இருந்து தானா மேரா­விற்கு பிற்­ப­கல் 1 மணிக்­கும் படகுச் சேவை இருக்­கும் என்­றார் அவர்.

பிந்­தா­னுக்கு நேரடி படகுச் சேவை இருக்­குமா என்­பது தெளி­வாக தெரி­ய­வில்லை.

இதற்­கி­டையே, கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்கொண்­ட­வர்­க­ளுக்­கான தனி­மைப்­ப­டுத்­தல் காலத்தை ஐந்­தில் இருந்து மூன்று நாள்­க­ளாக குறைப்­ப­தாக இந்­தோ­னீ­சிய நேற்று முன்­தி­னம் சொன்­னது.

வெளி­நாட்­டி­னர், இந்­தோ­னீ­சிய குடி­மக்­கள் என இரு­வ­ருக்­கும் இது பொருந்­தும். ‌கொவிட்-19 சூழ­லைப் பொறுத்து மார்ச் 1ஆம் தேதியோ அல்­லது அதற்கு முன்­ன­தா­கவோ இது நடை­மு­றைக்கு வரும் என்று அந்­நாட்­டின் மூத்த அமைச்­சர் லுஹுட் பண்ட்­ஜை­தன் சொன்­னார்.

தொற்­றுச் சம்­ப­வங்­கள் குறைந்து வரு­வ­தால் இந்த மாற்­றம் கொண்டு வரப்­பட்­ட­து என்றார் அவர்.