தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிருமித்தொற்றைவிட மாசுபாடு காரணமாக உயிரிழப்போர் அதிகம்

1 mins read
ed2e0424-791e-4561-8f03-3924369c8b78
-

ஜெனீவா: பெருந்­தொற்­றை­விட உல­க­ள­வில் மாசு­பாடு கார­ண­மாக அதி­க­மா­னோர் உயி­ரி­ழப்­ப­தாக ஐநா­வின் சுற்­றுச்­சூ­ழல் அறிக்கை கூறு­கிறது. எனவே, சில நச்சு ரசா­ய­னங்­க­ளைத் தடை செய்ய உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­க ­வேண்­டும் என்று அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

பூச்­சிக்­கொல்­லி­கள், பிளாஸ்­டிக், மின்­னணுக் கழி­வு­க­ளால் ஏற்­படும் மாசு­பாடு பெரு­ம­ளவு மனித உரிமை மீறல்­க­ளுக்கு வழி­வ­குத்­துள்­ள­தா­க­வும் அத­னால் ஆண்டிற்குக் குறைந்­தது 9 மில்­லி­யன் பேர் சரா­சரி ஆயுட்­கா­லம் வரை உயிர்­வா­ழா­மல் அகால மர­ண­ம­டைந்­து­விட்­ட­தா­க­வும் அறிக்கை கூறு­கிறது.

வேர்ல்ட்­டோ­மீட்­டர் தர­வின்­படி, கிரு­மித்­தொற்று கார­ண­மாக இது­வரை உல­க­ள­வில் 5.9 மில்­லி­யன் பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

"நச்­சுப் பொருட்­க­ளால் ஏற்­படும் அபாயங்­களைக் கையாள்­வ­தற்­கான தற்­போ­தைய அணு­கு­மு­றை­கள் தோல்­வி­ய­டைந்துள்ளதை இது தெளிவாக காட்டுகிறது. இதன் விளை­வாக சுத்­தம், ஆரோக்­கியம் ஆகிய மக்­க­ளின் முக்­கிய உரி­மை­கள் மீறப்­ப­டு­கின்­றன," என்று தனது அறிக்கையில் ஐநா­வின் சிறப்பு அறிக்­கை­யா­ளர் டேவிட் பாய்ட் சொன்­னார்.

வீடுகளில் பயன்படுத்தப்படும் நான்-ஸ்டிக் பாத்திரங்களுக்கான, புற்றுநோயோடு தொடர் புடைய, குறிப்பிட்ட வகை ரசாயனங்களுக்குத் தடை விதிக்கவும் அமைப்பு வலியுறுத்தியது.