'கூடுதல் தடுப்பூசி தாமதமே உயிரிழப்புக்கு காரணம்'

'கூடுதல் தடுப்பூசி தாமதமே உயிரிழப்புக்கு காரணம்'

1 mins read
535586b2-3823-4c9b-b266-39731972822e
-

தோக்­கியோ: ஜப்­பா­னில் நேற்று ஆக அதி­க­மாக 236 பேர் தொற்­றுக்­குப் பலி­யா­கி­னர்.

கூடு­தல் தடுப்­பூசி போடும் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்த ஜப்­பா­னிய அர­சாங்­கம் தாம­தப்­ப­டுத்­து­வ­தால் தான், ஓமிக்­ரான் பர­வ­லுக்கு அதி­க­மா­னோ­ரைப் பலி­கொ­டுக்க நேர்ந்­துள்­ள­தாக நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

ஜப்­பா­னிய மக்­கள்­தொ­கை­யில் கிட்­டத்­தட்ட 30 விழுக்­காட்­டி­னர் 65 அல்­லது அதற்­கும் மேற்­பட்ட வய­து­டை­ய­வர்­கள் ஆவர்.

இரண்­டா­வது தடுப்­பூ­சிக்­கும் கூடு­தல் தடுப்­பூ­சிக்­கு­மான கால இடை­வெ­ளியை, மற்ற நாடு­கள் குறைத்­து­விட்­ட­போ­தும், ஜப்­பா­னிய அர­சாங்­கம் எட்டு மாதம் என்றே தொடர்ந்து பின்­பற்­றி­யது. தற்­போது அது ஆறு மாதங்­க­ளாக குறைக்­கப்­பட்­டுள்­ளது.

ஜப்­பா­னில் வெறும் 10 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

இந்த இடை­வெளி தென்­கொ­ரி­யா­வில் மூன்று மாதங்­க­ளா­க­வும் சிங்­கப்­பூ­ரில் ஐந்து மாதங்­க­ளா­க­வும் உள்­ளது. இந்­நா­டு­களில், 50 விழுக்­காட்­டி­னர் கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.