ஹனோய்: வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை வியட்னாம் அரசாங்கம் தளர்த்தவுள்ளதாக அரசாங்கத் தகவல்களை மேற்கோள்காட்டி அந்நாட்டின் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மார்ச் 15ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருவதாக அது சொன்னது.
வியட்னாம் செல்லும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தடுப்பூசி விதிமுறைகளுக்கு உட்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
புறப்படுவதற்கு முன்னர், கிருமித்தொற்று இல்லை என்பதற்கான பரிசோதனை சான்றிதழ் சமர்ப்பிக்கப்படவேண்டும். கொவிட்-19 தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்களுக்கு வியட்னாம் விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் மற்றவர்கள் 24 மணி நேரம் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

