மெக்சிகோ: மெக்சிகோவின் தெற்கு எல்லையில் அகதிகளாக தங்கியிருக்கும் ஏராளமானவர்கள் தங்களுக்கு குடிநுழைவு ஆவணங்கள் வேண்டும் என நூதன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பெரும்பாலும் மத்திய, தென் அமெரிக்காவைச் சேர்ந்த அந்த குடியேறிகள் ஊசி, பிளாஸ்டிக் நூல்களைக் கொண்டு ஒருவருக்கொருவர் தைத்துக்கொண்டனர். உணவருந்துவதற்காக வாயின் ஒரு சிறிய பகுதியை மட்டும் விட்டுவிட்டு, தங்கள் வாயின் இரண்டு பக்கங்களையும் அவர்கள் தைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் அடையாளமாக அவர்கள் இவ்வாறு செய்ததாக ஆர்வலர் ஒருவர் சொன்னார்.
"நாங்கள் இங்கே கைதிகளைப் போல் இருக்கிறோம்," என்ற ரிவேரா, மெக்சிகோ குடிநுழைவுத் துறையிடம் பதிலுக்காக ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருப்பதாகக் கூறினார்.
படம்: ராய்ட்டர்ஸ்

