கிருமிப் பரவல் காரணமாக ஹாங்காங் தேர்தல் ஒத்திவைப்பு

1 mins read
43b2e022-9265-4c3d-a7fc-cf2c9bb69f52
-

ஹாங்­காங்: கிரு­மிப் பர­வ­லுக்கு எதி­ரான போராட்­டத்­திற்கு இடை­யில், ஹாங்­காங் தலைமை நிர்­வா­கிக்­கான தேர்­தல் மே மாதம் 8ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டு

உள்ளது.

அடுத்த மாதம் 27ஆம் தேதி நடை­பெ­ற­வி­ருந்த தேர்­தலை ஒத்தி வைப்­ப­தற்கு அவ­ச­ர­கால அதி­காரத்தைப் பயன்­ப­டுத்­து­வ­தாக அதன் தற்­போ­தைய தலைமை நிர்வாகி கேரி லாம் சொன்­னார்.

இது­வ­ரை­யில்­லாத அள­வுக்கு ஆக அதி­க­மான தொற்­றுச் சம்­பவங்­கள், அதி­க­ரித்து வரும் உய­ரி­ழப்­பு­கள் எனக் கடும் சவாலை எதிர்­கொண்­டுள்­ளது ஹாங்­காங்.

சென்ற ஜன­வரி மாதம் முதல் புதன்­கி­ழமை வரை ஹாங்­காங்­கில் 16,600 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

கடந்த 2020, 2021ஆம் ஆண்­டு­களில் அங்­குப் பதி­வான ஒட்­டு­மொத்த தொற்­றுச்­சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்­கை­யா­கும் இது.

எனவே, மருத்­து­வ­ம­னை­களும் தனி­மைப்­ப­டுத்­தல் மையங்­களும் ஊழி­யர் பற்­றாக்­கு­றை­யால் திண­று­கின்­றன.

இந்­நி­லை­யில், தனி­மைப்­ப­டுத்­தல் மையங்­களில் உள்­ள­வர்­க­ளுக்கு 7 நாளில் தொற்று இல்லை என்­பது உறுதி செய்­யப்­பட்­டால், அடுத்த 7 நாள்­க­ளுக்கு அவர்­கள் வீட்­டில் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்­ள­லாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்­கி­டையே, பிள்­ளை­களுக்குத் தடுப்­பூசி போட பெற்­றோர்கள் முனைப்பு காட்­டு­கின்­ற­னர்.

இரண்டு பச்­சி­ளம் குழந்­தை­கள் தொற்­றுக்­குப் பலி­யா­னது ஹாங்­காங்­கில் அதிர்ச்சி அலையை ஏற்­படுத்­தி­யது.

இதை­ய­டுத்து மூன்று வய­துக்கு மேற்­பட்ட பிள்­ளை­க­ளுக்­குத் தடுப்­பூசி போட ஹாங்­காங் இம்­மா­தம் 15ஆம் தேதி அனு­மதி அளித்தது.