2ஆம் காலாண்டில் எல்லைகளை திறக்க மலேசியா திட்டம்

2ஆம் காலாண்டில் எல்லைகளை திறக்க மலேசியா திட்டம்

2 mins read
42bddf18-8a0f-45a6-bee9-ad1f6a904b4e
-

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சிய எல்­லை­களை இந்த ஆண்­டின் இரண்­டாம் காலாண்­டுத் தொடக்­கத்­தில் மீண்­டும் திறக்க இலக்கு வகுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அந்­நாட்­டுச் சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் தெரி­வித்­துள்­ளார்.

சுகா­தார அமைச்சு, எல்­லை­களைத் திறக்­கை­யில் கடைப்­பி­டிக்­கப்­பட வேண்­டிய செயல்­மு­றைத் திட்­டங்­களை வகுக்­கும் என்­றும் அதன் பிறகு சில கட்ட மறு­ஆய்வுக்கு பிறகே அவற்­றுக்கு ஒப்­பு­தல் வழங்­கப்­படும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

"அமைச்­சின் திட்­டங்­கள், பிர­தமர் தலை­மை­யி­லான கொவிட்-19 கிரு­மிப் பர­வல் நிர்­வா­கக் குழு­வி­டம் சமர்ப்­பிக்­கப்­படும். ஹிஸா­மு­தீன் ஹுசேன் தலை­மை­யி­லான அமைச்­சர்­கள் குழு­வி­ட­மும் சமர்ப்­பிக்­கப்படும்," என்று தெரிவித்தார் கைரி.

அமைச்சர்கள் குழு, மலே­சிய அமைச்­ச­ர­வை­யி­டம் கொவிட்-19 தொடர்­பான நட­வ­டிக்­கை­க­ளைப் பரிந்­து­ரைக்­கும்.

"அமைச்­ச­ர­வை­தான் நாட்­டின் எல்­லை­களை மீண்­டும் திறப்­பது குறித்து முடி­வெ­டுக்­கும். சுகா­தார அமைச்சு மட்­டுமே முடி­வெ­டுக்க இய­லாது," என்றார் கைரி.

எல்­லை­க­ளைத் திறப்­பது குறித்த பரிந்­து­ரை­க­ளை­யும், கடைப்­பி­டிக்க வேண்­டிய செயல்­மு­றைத் திட்­டங்­க­ளை­யும் 2,3 வாரங்­க­ளுக்­குள் அமைச்­ச­ர­வை­யில் சமர்ப்­பிக்­கும்­படி மலே­சி­யச் சுகா­தா­ரத் துறை கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டி­ருப்­ப­தா­க மலேசியாவின் ஊடகத் தகவல்­கள் கூறின.

முன்­ன­தாக, வரும் மார்ச் 1ஆம் தேதி­யில் இருந்து தனி­மைப்­படுத்திக் கொள்­ளத் தேவை­யில்­லாத வகை­யில் நாட்­டின் எல்­லை­க­ளைத் திறக்­கப் பரிந்­து­ரைத்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­பட்­டி­ருந்­தது.

முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான தேசிய மீட்சி மன்­றம் அந்­தப் பரிந்­து­ரையை முன்­வைத்­தி­ருந்­தது.

இதற்கிடையே, மலேசியாவின் சில மாநி­லங்­களில் கொவிட்-19 பாதிப்­பால் கவ­லைக்­கு­ரிய நிலையில் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை வெகு­வாக உயர்ந்­துள்­ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மருத்­து­வ­ம­னை­க­ளின் தீவிர சிகிச்­சைப் பிரி­வு­களில் 50%க்கும் அதி­க­மான படுக்­கை­கள் நிரம்பி விட்ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்டுள்ளது.

செயற்­கைச் சுவா­சக் கரு­வி­களைப் பயன்­ப­டுத்­து­வோ­ரின் எண்ணிக்கை 36 விழுக்­காடு அதி­கரித்­த­தாக மலே­சி­யச் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

கொவிட்-19 நோயா­ளி­கள் உள்­ளிட்ட நோயாளி களின் எண்­ணிக்­கை­யைச் சமா­ளிக்­கக் கூடிய நிலை­யில் மருத்­து­வ­ம­னை­கள் இருப்­ப­தாக அது நம்­பிக்கை தெரி­வித்­தது.