நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது

நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது

1 mins read
ce8199b0-ed80-4291-852f-ab463d83e7cb
-

ஒட்­டாவா: ஆர்ப்­பாட்­டத்­தால் மூன்று வாரங்­க­ளாக முடங்­கி­யி­ருந்த கன­டி­யத் தலை­ந­கர் ஒட்­டா­வா­வில், நூற்­றுக்­கும் அதி­க­மான ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

மேலும் அதி­க­மா­னோர் ஆர்ப்­பாட்­டத்­தில் சேரா­மல் தடுக்க சுமார் நூறு சோத­னைச் சாவ­டி­கள் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன.

நாடா­ளு­மன்­றத்­துக்கு அருகே நிறுத்­தி­யி­ருந்த அவர்­க­ளின் வாக­னங்­க­ளைக் காவல்­து­றை­யி­னர் அப்­பு­றப்­ப­டுத்­தி­னர்.

கடுங்­கு­ளி­ரை­யும் பொருட்­ப­டுத்­தாது, அதி­கா­ரி­கள் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை அப்­பு­றப்­ப­டுத்த நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர்.

முன்­ன­தாக, ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை அங்­கி­ருந்து வில­கிச் செல்­லும்­படி அதி­கா­ரி­கள் கேட்­டுக்­கொண்­ட­னர்.

மறுத்­த­வர்­களை அவர்­கள் கைது செய்ய நேரிட்­டது.

கைது நட­வ­டிக்கை தொலைக்­காட்­சி­யில் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பப்­பட்­டது. இருப்­பி­னும் மற்ற இடங்­களில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் சாலை களை மறித்து வாக­னங்­களை நிறுத்­தி­வைத்­துப் போராட்­டத்­தைத் தொடர்ந்­த­தா­கச் செய்திகள் தெரிவித்தன.