செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
be16f25c-f6c6-4be7-93f7-03d24df322cc
-

தீப்பற்றி எரியும் கப்பலில்

ஆடவர் உயிருடன் மீட்பு

கோர்ஃபு (கிரீஸ்): கிரீஸ் அருகே நடுக்கடலில் மூன்று நாள்களாக தீப்பற்றி எரியும் கப்பலில் இருந்து நேற்று ஒரு பயணி உயிருடன் மீட்கப்பட்டார். அதிலிருந்த மேலும் 11 பேரின் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை என்று கடலோரக் காவல் படையினர் கூறினர். மீட்கப்பட்ட ஆடவரின் வயது 21. தாம் பெலருஸைச் சேர்ந்தவர் என்று மீட்புப் படையினரிடம் அவர் கூறினார். "கப்பலின் கீழ்த்தளத்திற்கு நான் சென்றிருந்தபோது திடீரென்று கூக்குரல்கள் கேட்டன. அதன் பிறகு நான் யாரையும் பார்க்கவில்லை," என்றும் அவர் தெரிவித்தார். இவர் மீட்கப்பட்டதன் மூலம் மற்றவர்களையும் உயிருடன் மீட்கும் நம்பிக்கை மீட்புப் பணியாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.

கிருமி தொற்றியோருக்கு தனிமை உத்தரவை நீக்க பிரிட்டன் திட்டம்

லண்­டன்: கொவிட்-19 கிருமி தொற்­றி­ய­வர்­கள் சுய­த­னி­மை­யில் இருக்க வேண்­டும் என்­னும் கட்­டுப்­பாட்டை நீக்க இந்த வாரம் திட்­டங்­களை வகுக்க இருப்­ப­தாக பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் தெரி­வித்து உள்­ளார். அவ்­வாறு செய்­யப்­பட்­டால் கொவிட்-19 நோயா­ளி­கள் சுதந்­தி­ர­மாக நட­மாட அனு­ம­திக்­கும் பெரிய ஐரோப்­பிய நாடு­களில் முத­லா­வ­தாக பிரிட்­டன் அமை­யும் என்று ராய்ட்­டர்ஸ் தெரி­வித்துள்­ளது.

கொவிட்-19 கிருமி தொற்­றிய நிலை­யில் நோயா­ளி­கள் கடை­க­ளுக்­குச் செல்­ல­வும் பொதுப் போக்­கு­வ­ரத்­தைப் பயன்­ப­டுத்­த­வும் வேலைக்­குச் செல்­ல­வும் அனு­மதி வழங்கத் திட்­ட­மி­டப்­பட்டு வரு­கிறது. ஆனால் இவ்­வாறு செய்­வது ஆபத்­தா­னது என்று பிர­த­ம­ரின் சுகா­தார ஆலோ­ச­கர்­கள் எச்­ச­ரித்துள்­ள­னர்.

"கொவிட்-19 தொற்று என்­பது திடீ­ரென்று மாய­மாய் மறைந்­து­வி­டக்கூடி­ய­தல்ல. நமது சுதந்­தி­ரத்­தைக் கட்­டிப்­

போ­டாத நிலை­யில் நம்மை நாம் பாது­காத்­துக்கொள்­வ­தைத் தொட­ர­வேண்­டும். கிரு­மித்­தொற்­று­டன் வாழக் கற்றுக்­கொள்ள வேண்­டும்," என்று திரு ஜான்­சன் தமது

அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்தோனீசியாவில் 158 பேர் மரணம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் சனிக்கிழமை 59,384 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. 158 பேர் தொற்று காரணமாக மாண்டனர். அந்நாட்டில் இதுவரை ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும், 146,000 பேர் மரணமடைந்துள்ளனர். மக்கள்தொகை அடிப்படையில் உலகின் நான்காவது பெரிய நாடான இந்தோனீசியா மூன்றாம் கட்ட கிருமிப் பரவலை எதிர்த்துப் போராடி வருகிறது.

டிரம்ப்பின் சமூக ஊடகச் செயலி

சான்­ஃபி­ரான்­சிஸ்கோ: முன்­னாள் அமெ­ரிக்க அதி­பர் டோனல்ட் டிரம்ப்­பின் புதிய சமூக ஊட­கக் கைபே­சிச் செய­லி­யான 'ட்ரூத் சோஸி­யல்' இன்று (பிப்­ர­வரி 21) ஆப்ஸ்­டோ­ரில் வெளி­யா­கும் என்று தெரி­விக்­கப்­பட்டுள்­ளது. இதன்­மூ­லம் சுமார் ஓராண்டு இடை வெளிக்குப் பின்­னர் திரு டிரம்ப் சமூக ஊட­கத்­திற்­குத் திரும்­பு­வ­தாக ராய்ட்­டர்ஸ் தெரி­வித்­தது. செய­லி­யின்

சோத­னைப் பதிப்பைப் பார்­வை­யிட்­ட­தாக அது கூறியது. இந்­தச் செய­லிக்­கான கட்­ட­மைப்­பின் தலைமை தயா­ரிப்பு அதி­கா­ரி­யின் பெயர் 'பில்லி பி' என்று குறிப்பிடப்­பட்டுள்­ளது. புதிய செயலி பற்றி பொது­மக்­கள் எழுப்­பும் பல்­வேறு கேள்­வி ­க­ளுக்கு அவர் கடந்த வெள்­ளிக்­கி­ழமை பதி­ல­ளித்­தார்.