பெட்டாலிங் ஜெயா: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது தமக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை என்று டாக்டர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி அம்மாநில வாக்காளர்களுக்கு எழுதியுள்ள தமது இரண்டாவது கடிதத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
"நஜிப் அவரது தந்தையைப் போல இல்லை. நாட்டின் இரண்டாவது பிரதமரான அவரது தந்தை அப்துல் ரசாக் ஹுசைன் சிறந்த தேசியவாதி. நாட்டின் நலனுக்காகப் போராடிய கண்ணியமிக்க தலைவர். ஆனால் நஜிப்போ நாட்டின் செல்வ வளத்தை ஜோ லோவின் துணையுடன் கொள்ளையடித்துள்ளார்.
"நஜிப் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை. அவர் துணைப் பிரதமர் பதவியைப் பெற, பிரதமராக இருந்த அப்துல்லா படாவியிடம் அழுத்தமாகப் பரிந்துரைத்தேன். அவர் துணைப் பிரதமர் ஆக என் ஆதரவை வழங்கினேன். 1எம்டிபி விவாகரத்திற்குப் பின்னரே நஜிப்பைக் குறைகூறத் தொடங்கினேன்.
"நீதிமன்றம் தண்டித்த பின்னரும் அவர் அதற்காகச் சிறிதும் வருத்தப்படவில்லை. அவர் மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஏற்காதவாறு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்," என்று டாக்டர் மகாதீர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தம்மைத் தாக்கி கடிதம் எழுதும் அளவுக்கு மகாதீர் உடல்நலம் தேறி இருக்கவேண்டும் என கடந்த 15ஆம் தேதி திரு நஜிப் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் டாக்டர் மகாதீர் நேற்று முன்தினம் கடிதத்தை வெளியிட்டார்.
மார்ச் 12ஆம் தேதி நடைபெற இருக்கும் ஜோகூர் மாநிலத் தேர் தலில் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி வெற்றிபெறும் என பரவலாக எதிர்பார்க்கப்படு கிறது. எதிர்த்தரப்பினர் பலவாறாகப் பிரிந்து களத்தில் நிற்பதால் இந்த நிலை என கூறப்படுகிறது.

