ஹாங்காங்: ஹாங்கில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மேலும் கடுமையான சமூக இடைவெளி விதிமுறையை நடைமுறைப்படுத்துவது குறித்து அந்நாடு பரிசீலனை செய்கிறது. அண்மையில் பலர் நோய்வாய்ப்பட்டுள்ளதால் ஹாங்காங்கின் மருத்துவக் கட்டமைப்புக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது. கொவிட்-19 அறவே இல்லாத நிலையை நோக்கி செயல்பட்டு வரும் ஹாங்காங் அரசாங்கத்துக்கு இது பெரும் பின்னடைவை ஏற்
படுத்தியுள்ளது.
இதுவரை காணாத மிக மோசமான கிருமிப் பரவலை ஹாங்காங் தற்போது எதிர்கொள்கிறது.
மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் இல்லாத காரணத்தினால் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மூத்தோர் பலர் சாலைஓரமாகப் படுத்துக் கிடக்கின்றனர். ஹாங்காங் மக்கள் பலர் பதற்றம் அடைந்து மருத்துவமனைகளில் உள்ள அவசரகால சிகிச்சைப் பிரிவு களில் திரண்டுள்ளனர்.
நிலைமை கைமீறிப் போகாமல் இருக்க ஹாங்காங் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று சீன அதிபர் ஸி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
"அடுத்த ஓரிரு வாரங்களில் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை மிக உன்னிப்பாகக் கண்
காணிக்க வேண்டும். கிருமிப்
பரவலை எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவருவது என்பது குறித்து அதன் பிறகு முடிவெடுப்போம்," என்று ஹாங்காங்கின் சுகாதாரப் பாதுகாப்பு மையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரியான எட்வின் சுவீ நேற்று முன்தினம் தெரிவித்தார்.
கிருமிப் பரவலைக் குறைக்க சில நடவடிக்கைகளை நடை
முறைப்படுத்துவது குறித்து ஹாங்காங் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. கடைத்தொகுதிகளுக்குச் செல்வோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டவர்களா என்பதை உறுதி செய்யும் பொறுப்பு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படக்கூடும். அத்துடன் உணவகங்களில் உண
வருந்துவது தொடர்பாகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்
படக்கூடும்.
கடந்த வியாழக்கிழமையி
லிருந்து குறிப்பிட்ட சில இடங்
களுக்கு முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே செல்லலாம் என்று ஹாங்காங்
அரசாங்கம் அறிவித்தது.
உடற்பயிற்சிக் கூடங்கள், அழகு நிலையங்கள் ஆகியவற்றை இம்மாதம் 24ஆம் தேதியன்று மீண்டும் திறக்க ஹாங்காங் முதலில் திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
"தற்போதைய நிலையைப் பார்க்கும்போது, கிருமிப் பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நட
வடிக்கைகள் போதுமானவை அல்ல என்பது நன்கு தெரிகிறது. சவாலை முறியடிக்க சரியான முறையில் அரசாங்கம் திட்டமிடவில்லை," என்று ஹாங்காங் நாடாளுமன்ற உறுப்பினரும் தலைமை நிர்வாகி கேரி லாமின் நிர்வாக மன்றத்தின் உறுப்பினருமான திருவாட்டி ரெஜினா இப் தெரிவித்தார்.
இதற்கிடையே, கொவிட்-19 நெருக்கடிநிலையால் நிலைகுலைந்திருக்கும் ஹாங்காங்கை விட்டு பலர் வெளியேறுகின்றனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த வாரம் 27,703 பேர் அந்நாட்டை விட்டு வெளியேறினர். அவர்களில் 72 விழுக்காட்டினர் விமானங்கள் மூலம் மற்ற நாடுகளுக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. மற்றவர்கள் நிலம் வழியாக சீனாவுக்குச் சென்றதாக ஹாங்காங் குடிநுழைவுத் துறை வெளியிட்ட புள்ளி
விவரங்கள் காட்டுகின்றன.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட மிகக் கடுமையான கட்டுப்பாடுகள், அரசியல் நெருக்குதல் கள் ஆகியவை காரணமாகப் பலர் ஹாங்காங்கை விட்டுச் செல்வ
தாகக் கூறப்படுகிறது.

